Friday, June 29, 2012

கனவே கலையாதே





உன்னை
கட்டியணைத்து உறங்கையில்,
கனவிலும்
உன் முகம் காண ஏங்கும்
பேராசைக்காரனடி நான்..

Thursday, October 13, 2011

மாலை மங்கும் நேரம்..



நாம்
அமர்ந்து கதைபேசி
நான்கு  நாட்களாகிவிட்டதென..
சங்கடமாய்
ஜாடை பேசுகிறது
நம்
தோட்டத்து நாற்காலி..

கற்றது காதல்..



நம் பேச்சை
கேட்டு கேட்டு
காது வலித்தது
மட்டுமின்றி..
காதலிக்கவும்
கற்றுகொண்டதோ
சிணுங்கும்
நம் செல்போன்கள்...

Saturday, September 24, 2011

காதல் காலம்..



தூரங்கள்
நமை பிரிப்பதற்கும்
நினைவுகள்
நமை சேர்ப்பதற்கும்
சண்டையிட்டு கொள்ள...
கண்டுகொள்ளாமல்
நாமிருப்போம்
காதலித்துகொண்டே..

பூவின் மொழி நீ..




மிதிக்க கூடாதென
நீ விலகி போக
வாடிப் போனதடி
பூக்களெல்லாம்
உன் பாதம் தீண்டாமல்..

Sunday, September 4, 2011

இச்..இச்..இச்..



முத்தம்
என்று
பெயர் வைத்தேன்..
நம்
நாண்கு உதடுகளும்
இணைந்து இயற்றிய
கவிதைக்கு..

விழி மூடி யோசித்தால்..



நம்
முத்தத்தின் போதெல்லாம்
ஏனடி
கண்களை மூடுகிறாய்?
முடியவே கூடாதிந்த முத்தம்
என்றேதும் பிரார்த்தனையா?